காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இந்த சூழலில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நகராட்சிகள் , மாநகராட்சிகள் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள் ,ஊராட்சிகள் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சிகளில் பணிபுரிந்து வரும் காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 4 ஆயிரத்து 933 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேரூராட்சிகள் நகராட்சிகள் பணிபுரிவோருக்கு 4 ஆயிரத்து 843 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கணக்காளர், ஸ்டோர் கீப்பர் ,அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ,வாட்ச்மேன் என அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியத்தை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஊதியம் அதிகமான தொகையாக வழங்கப்பட்ட வந்தால் அதை தொடர வேண்டும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் ஊதியத்தை சமமாக பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.