இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறந்தார்.
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் இருந்தவர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக விளங்கினார். 1991-ல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ராவ் பிரதமரானார்.
ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. தனது 83-ம் வயதில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி நரசிம்ம ராவ் மாரடைப்பால் காலமானார்.